காங்கோ ஜனநாயக குடியரசின் வடக்கில் இரு இனக் குழுக்களுக்கு இடையில் நடக்கும் மோதல்கள் காரணமாக ஐம்பதாயிரத்துக்கும் அதிகமானவர்கள் வெளியேற நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சித் தலைவர்கள் இடையில் ஸ்விட்சர்லாந்தின் ஜூரிச் நகரில் கூட்டம். பொது இணக்கப்பாடு காண்பது கூட்டத்தின் நோக்கம் என்கிறார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.
இந்தியாவில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு வேட்டையாடி அழிக்கப்பட்ட சீட்டா என்ற ஒரு வகை சிறுத்தைகளை மீண்டும் இந்தியக் காடுகளில் அறிமுகப்படுத்த ''வைல்ட்லைப் டிரஸ்ட் ஆப்''( வன உயிர் காப்பகம்) இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இடைத்தங்கல் முகாம்களில் இருந்து பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் சிபாரிசையடுத்து, யாழ் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பினைத் தொடர்வதற்கென நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.
வேதியல் துறையில் இந்த வருடத்துக்கான நோபெல் பரிசைப் பெறுகின்றவர்களில் ஒருவரான சிதம்பரத்தில் பிறந்த தமிழர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் தமிழோசைக்கு வழங்கிய செவ்வி.
அமெரிக்காவில் அண்மையில் காலமான பசுமைப் புரட்சியின் தந்தை என்று கருதப்படும் நார்மன் போர்லாக் சாதனைகள் குறித்து இந்தியாவில் பசுமைப் புரட்சித் திட்டங்களை செயற்படுத்திய வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.ஸ்வாமிநாதன்.
இந்தியா சந்திக்கும் மிகப்பெரும் சுகாதார நெருக்கடியாக நீரிழிவு நோய் என்றும், சர்க்கரை வியாதி என்றும் அறியப்படும் டயபடீஸ் உருவாகியிருப்பதை விளக்கும் தொடர்.
தென்னாப்பிரிக்க ஓட்டப்பந்தய வீராங்கனை செமென்யாவின் பதக்கம் திரும்பப் பெறப்படாது என சர்வதேச தடகளம் அறிவித்துள்ளது பற்றி முன்பு பதக்கம் இழந்த தமிழக வீராங்கனை சாந்தி செளந்தரராஜன் கருத்து.
விடுதலைப் புலிகளின் வற்புறுத்தல் காரணமாகவே ஊடகங்களுக்கு மிகைப்படுத்தப்பட்ட தகவலகளை வழங்கியதாக, யுத்த காலத்தில் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதியில் பணியாற்றியிருந்த அரச மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்து விசாரணை செய்த ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு தனது விசாரணை முழுமை பெறாமலேயே தனது பணியை முடித்துக்கொண்டுள்ளது.
எய்ட்ஸ் நோய்க்குக் காரணமான ஹெச்.ஐ.வி. கிருமியின் தொற்றைத் தடுக்க உதவும் ஓர் தடுப்பு மருந்து 30 சதவீத பாதுகாப்பு வழங்குவதாக பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்தியா மற்றும் இந்து மதத்துடன் தொடர்புடையது என்று கருதப்படும் பரதநாட்டியத்தை ஐம்பது வருடங்களுக்கு மேலாக பாகிஸ்தானில் அரங்கேற்றி வருகிறார் 80 வயதாகும் இந்துமித்தா.
இந்தியாவில் வயதுக்கு வந்தவர்கள் மத்தியில் பரஸ்பர ஒப்புதலுடன் நடக்கும் ஓரினச் சேர்க்கை குற்றச்செயல் அல்ல என்று தில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டுவிட்ட நிலையில், சொந்த இடங்களுக்கு திரும்புவது பற்றி புத்தளம் முஸ்லிம் அகதிகளுடைய கருத்துகளைப் பிரதிபலிக்கும் பெட்டகம்.
விடுதலைப் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டு விட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ள நிலையில், வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஆயுதப் போராட்டத்தை திரும்பிப் பார்க்கும் ஓர் கண்ணோட்டம்.
விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்பதை புலிகள் சார்பாகப் பேசவல்லவரான செல்வராசா பத்மநாதன் உறுதிப்படுத்தியுள்ளார்.